ஓடும் அருவியில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஓடும் அருவியில்  சிசுவின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அருவியில் சிசுவின் சடலம் மிதப்பதைக் கண்ட மக்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், பாதுகாப்பு வேலி அமைத்து சிசுவின் சடலம் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து ஹட்டன் நீதிமன்ற நீதிவான் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கைரேகைகள் பதிவு செய்ய உள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சிசு பொலித்தீன் உறையில் போடப்பட்டு ஓடையில் வீசப்பட்டுள்ளதாகவும், சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply