யாழில் முன்னெடுக்கப்பட்ட காணி சுவீகரிப்பு – அணிதிரண்ட மக்கள்!

யாழ்ப்பாணத்தில் காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியைக் கடற்படையினருக்கு நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்குடன் அளவீடு செய்யும் முயற்சி இடம்பெற்றது.

அதனையடுத்து பிரதேச மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்புக் காரணமாகத் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு முள்ளியான் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஜே/433 கட்டைக்காடு பகுதியில் கடற்படை முகாம் அமைந்திருக்கும் ஒன்றரைப் பரப்புக் காணியை கடற்படையினருக்காக அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று காலை மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அங்கு ஒன்றுகூடிய பிரதேச மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து காணி அளவீட்டுப் பணி தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply