மகனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை

தனது மகனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஒன்று காங்கோ நாட்டில் பதிவாகியுள்ளது.

காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது தீடீரென இறந்தவரின் தந்தையார் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் இறுதி சடங்கில் பங்கேற்ற வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டார்.

இதனையடுத்து, இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் அலறியடித்து ஓடினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 9 குழந்தைகள் உட்பட 13 பேர் இறந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply