யாழில் தொடரும் காணி அபகரிப்பு – இரண்டாவது நாளாகவும் முறியடிப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி இரண்டாவது நாளாக இன்றும் முறியடிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து சென்றுள்ளது.

அவர்களை வழிமறித்த காணி உரிமையாளர், கிராம மக்கள், அரசியல்வாதிகள் இது எங்களுடைய சொந்த காணி என்றும் இதனை அளவீடு செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறித்த நில அளவை அதிகாரிக்கு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றும் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் காணி அளவீடு செய்வதை நிறுத்திவிட்டு திரும்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை வடமராட்சி கிழக்கில் நேற்றிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுவீகரிக்கப்படவிருக்கின்ற அனைத்து காணிகளும் தனியாருக்கு சொந்தமானது என்றும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply