கிறீசில் விமான விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

கிறீசில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் உயிரிழந்தனர்.

எவியா தீவில் பற்றி எரிந்த காட்டுத் தீயைக் கட்டுப்படுத்து பணியில் கனடா ஏர் நிறுவனத்தின் CL-215 ரக விமானம் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

அருகில் இருந்த நீர் நிலையில் இருந்து தண்ணீரை எடுத்து நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டினை இழந்த விமானம் மலைப்பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறி விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் விமானியும், துணை விமானியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, விமானிகளின் இழப்பிற்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கனேடிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply