கொழும்பில் தொடரும் மர்மம் – மற்றுமொரு தாயும் மகளும் மாயம்!

கொழும்பில் மேலுமொரு தாயும் மகளும் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளுமே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23 வயதுடைய இஷாதி ரங்கிகா என்ற தாயும் 3 வயதுடைய ஹிமாஷி என்ற பெண் குழந்தையும் 8 நாட்களாக காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் திகதி முதல் தனது மனைவியும் மகளும் காணாமல் போயுள்ளதாக கணவர் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

தான் 19ஆம் திகதி காலை கிருலப்பனை பாமன்கடை பழக்கடைக்கு வேலைக்குச் சென்றதாகவும், அன்று இரவு 10.00 மணியளவில் வீடு திரும்பிய போது மனைவியும் மகளும் வீட்டில் இல்லை என கணவர் சமிந்து திவங்க  தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அவர், தெமட்டகொடயில் வசிக்கும் தாயாரிடம் மனைவி மற்றும் மகள் குறித்து கேட்ட போது, அவர்கள் அங்கு செல்லவில்லை என கூறியதாக சமிந்து திவங்க குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமராக்களையும் ஆய்வு செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய் மற்றும் மகள் தொடர்பில் தகவல் தெரிந்திருப்பின் 0112-850700 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மஹரகம பொலிஸாருக்கு அறிவிக்குமாறு, பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply