பாடசாலை உபகரணங்களின் விலை குறைப்பு!

பாடசாலை பாதணி மற்றும் புத்தகப் பைகளின் விலையை, 10 சதவீதத்தினால் குறைக்க உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற காலந்துரையாடலில் குறித்த தரப்பினருடன் இந்த இணக்கப்பாடு கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விலை அதிகரிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது சந்தையில் விற்பனைக்கு இருக்கும் பாடசாலை பாதணிகள் மற்றும் புத்தகப் பைகளையும் திருத்திய விலையில் விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply