மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

மாதம்பே, தம்பகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர்கள் ருவன்வெல்ல மற்றும் சிலாபம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் இரு மாணவர்களும் பயணித்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்தமையினால் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தின் போது, ​​இரண்டு மாணவர்களும் பாடசாலை சீருடையுடன் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய மாணவர் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply