வசந்த முதலிகே பிணையில் விடுதலை!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (28) கொழும்பு கோட்டை நீதமன்றத்தில் முற்படித்திய வேளையில் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

வசந்த முதலிகே கறுவாத்தோட்ட பொலிஸாரால் நேற்று (27) மாலை கைதுசெய்யப்பட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply