ஈரானில் அதிகரித்த வெப்பநிலை – பொது விடுமுறை தினம் அறிவிப்பு

ஈரானில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக இன்றும் நாளையும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வயதானவர்களையும் உடல்நலப் பாதிப்புக்குள்ளானவர்களையும்  வெளியே நடமாடாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரானின் தெற்கு நகரமான அஹ்வாஸில் இந்த வாரம் வெப்பநிலை 51 பாகை செல்சியஸை தாண்டியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து ஈரானிய அரசாங்க ஊடகப் பேச்சாளர் அலி பஹடோரி ஜஹ்ரோமி குறிப்பிடுகையில்,

புதன் மற்றும் வியாழன் விடுமுறை தினங்களாக இருக்கும் அதேவேளை வைத்தியசாலைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது என்றார்.

அதன்படி, நாளை தெஹ்ரானில் 39 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply