பேருந்து – பாரவூர்தி விபத்து : ஒருவர் பலி

துல்ஹிரிய பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த போது, எதிர்த் திசையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் ஒரு பெண் இறந்துள்ளதாகவும் ,15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் வரக்கா பொலிஸ் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply