பாராளுமன்ற உறுப்பினரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டாவால் காயமடைந்த நபர்!

துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்த போது வெளியேறிய தோட்டாவினால் காயமடைந்த நபர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரலவின் துப்பாக்கியை பொலிஸ் உத்தியோகத்தர் சுத்தம் செய்துக்கொண்டிருந்த நிலையில் தவறுதலாக தோட்டா வெளியேறியுள்ளது.

வெளியேறிய தோட்டா அவருக்கு அருகிலிருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது பட்டுள்ளதை அடுத்து காயமடைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply