அவுஸ்திரேலியாவில் காட்டுக் காளானை உட்கொண்ட மூவர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் தெற்கு கிப்ஸ்லாந்தில் காட்டு காளானை உட்கொண்டதால் மூவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுக் காளானை உண்ட 66 மற்றும் 70 வயதுடைய இரண்டு சகோதரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

70 வயதான ஒருவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், 68 வயதுடைய நபர் ஒருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply