அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு கல்முனை மாவட்ட நீதிபதி எம்.எஸ். எம். சம்சுதீன் தலைமையில் கடந்த சனிக்கிழமை அட்டாளைச்சேனை ஹனிபா மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வு  பகல், இரவு என இரு அமர்வுகளாக 150 க்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இடம்பெற்றது.
இரண்டாம்  அமர்வாக பிற்பகல் 6 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரை இடம் பெற்ற ஒன்று கூடலில் சங்கீதக் கதிரை,   முட்டி உடைத்தல் மற்றும் சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் இடம் பெற்றன.
இப் போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(எம். எப். நவாஸ்)

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply