மின் கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு எனவும், ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போல் மின்சார கட்டணத்தில் திருத்தம் இருக்காது என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை மின்வெட்டுகள் இன்றி ஆண்டு முழுவதும் தடையின்றி மின்சார விநியோகத்தை நாடளாவிய ரீதியில் வழங்குவதற்கு மின்சார சபை திட்டமிட்டுள்ளது.

தற்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களின் முழு கொள்ளளவும் மின் உற்பத்திக்கு பயன்பாட்டில் உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிசெய்வது மற்றும் விவசாயத்திற்கான நீரை திறப்பது குறித்து இலங்கை மின்சார சபை மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்துடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply