யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது – இருவர் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தப்பியோடியள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 54 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

காங்கேசன்துறை கடற்படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் எனத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனையடுத்து குறித்த நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், தப்பி சென்ற இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply