உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் முடிவு நாடாளுமன்றில்!

பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் திருத்தச் சட்டமூலத்தின் சில ஷரத்துக்கள் அரசியலமைப்புச்சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இதனால், அந்த ஷரத்துக்கள் நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையில் அல்லது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளை மீண்டும் ஸ்தாபிப்பது தொடர்பான இந்த சட்டமூலத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply