வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைக் கோரி அம்பாறையில் போராட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரிய போராட்டம் இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியாகின்றன.

அந்த வகையில் தமது உறவுகளை கோரி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தலமையில் இன்று (09) காலை அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியில் இடம் பெற்றது. .

குறித்த போராட்டமானது, அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியில் இடம் பெற்றதுடன் பிரதான வீதி வழியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு திருக்கோவில் மணிகூண்டு கோபுரத்தினை வந்தடைத்ததுடன் தமது உறவுகளை ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன், அம்பாறை, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட வட கிழக்கு இணைந்த வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தாய் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply