ஒருமித்த நிலைப்பாட்டிற்கு தயாராகவுள்ள மனோ!

அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் நிலைப்பாட்டில் உள்ளவர் என்று பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், நாங்கள் உங்களை சந்தித்தபோது, அதிகாரத்தை பரவலாக்கி அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தினோம்.

ஆனால், அவர் செய்யவில்லை. இப்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது. இந்தப் பிரச்சினையை நாம் இப்போதே தீர்த்துவிடுவோம்.

நாம் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரத் தயாராகவுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply