பொதுத் தேர்தலுக்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையின் படி,  நாடாளுமன்றத்தைக் கலைக்க பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாகிஸ்தான் சட்டப்பிரிவு 58 கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான அறிவிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத்தொடர்ந்து தற்போதைய அரசின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகின்றது.

தொகுதி மறுசீரமைப்பு போன்ற பிரச்சினைகளால் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், இடைக்கால அரசு அமைக்க எதிர்க்கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருவதாக பதவி விலக உள்ள ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply