கல்வியங்காட்டில் மீட்கப்பட்ட சடலம் – சந்தேகநபர்கள் அறுவர் கைது!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பிரதேசங்களை சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களுமே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த 9 வயதுச் சிறுமி  ஒருவரை பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வரும் நிலையில் குறித்த நபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி தனது தாயாருக்கு தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, குறித்த தகவல் தொடர்பில், தாயார் சித்தங்கேணியில் உள்ள சிறுமியின் மாமனுக்கு தெரிவித்திருந்த நிலையில், அவர் கோப்பாய் வந்து குறித்த நபரை சிந்தங்கேணிக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரித்த போது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நபரை கோப்பாய் கொண்டுவந்து அவரது இல்லத்தில் விட்டுள்ளனர்.

அவ்வாறு வீட்டில் விடப்பட்ட நிலையில் குறித்த நபர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிந்த நபரின் உடலில் அடிகாயங்கள் காணப்பட்ட போதும் உயிர் பிரிய கூடிய வகையில் காயங்கள் பாரதூரமானதாக இல்லை எனவும், குறித்த நபர் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், மாரடைப்பினால் அவரது  உயிர் பிரிந்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிபதியின் முன்னிலையில் ஆயர்படுதப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply