வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு!

தொடங்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் 37 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தொடங்கொட டொலேலந்த பிரதேசத்தில் வசிக்கும் மாத்தறை ஆராச்சிகே திமுத் சாமிக்க என்ற ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டோலலாண்டாவில் உள்ள அவர்களது சொந்த வீட்டில் திருத்த பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதன் காரணமாக, அவர் தனது மனைவியின் பெற்றோரின் வீட்டில் தங்கியிருந்தபோது கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டினுள் அத்துமீறி நுழைந்த ஒரு குழுவினர், கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் உயிரிழந்தவர் படுகாயமடைந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் பின்னர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இறந்தவருக்கும் மத்துகம பிரதேசத்தில் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதன்படி, தாக்குதல் நடத்திய குழுவினர் குறித்த போதைப்பொருள் வியாபாரியின் கூட்டாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர், இறந்தவர் போதைப்பொருள் விற்பனையாளருடன் நெருங்கிய கூட்டாளியாக இருந்ததாகத் தெரிவித்தார்.

கொலைச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மற்றும் தாக்குதல் நடத்திய குழுவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் களுத்துறை காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply