நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

தனது உறவினருடன் நேற்று மாலை ஆற்றிற்கு நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா, கந்தப்பளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே ஊவா பரணகம – ரத்தம்ப தியகொலராவ ஆற்றில் மூழ்கி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் ஊவா பரணகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply