சட்டவிரோத எல்லைக்கடப்பு – போலந்தில் சிக்கிய இலங்கையர்கள்!

பெலாரஸில் இருந்து போலந்திற்கு சட்டவிரோதமாக பிரவேசிப்பதற்கு முயற்சித்த இலங்கையர்கள் உட்பட பல நாடுகளின் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் பிரஜைகள் 160 பேர், வார இறுதியில் போலந்திற்குள் செல்ல முயன்றனர் என போலந்து ஊடகம் தெரிவித்துள்ளது.

நான்கு சிரிய மற்றும் மூன்று பங்களாதேஷ் குடிமக்களை போலந்திற்கு கொண்டுசெல்வதற்கு உதவ முயற்சித்த மூன்று உக்ரேனிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஏற்கனவே 500க்கும் மேற்பட்டோர் சட்டவிரோத எல்லைக் கடப்பு நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான அடையாளங்களோ மேலதிக விபரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply