ஞானசார தேர் உள்ளிட்ட எழுவருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 11ஆம் திகதி மீள அழைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

புனித குர்ஆன் தொடர்பான தவறான மற்றும் போலியான அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லையென காவல்துறையினரால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், பிணையில் விடுதலையாகியுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழு இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply