நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு இரத்தான முகாம்!

நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் கருப்பொருளில் யாழில் இரத்தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நல்லூர் சப்பறத் திருவிழாவான இன்றைய தினம், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும்,  நாளை தேர்த் திருவிழாவின் போதும் நாளை மறுநாள் தீர்த்தத் திருவிழாவின் போதும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை  இடம்பெறவுள்ளதோடு, பூங்காவனத் திருவிழாவான 15 ஆம் திகதி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரத்ததான முகாம் யாழ்.மநாகர சபையின் சுகாதார மருத்துவ பணிமனையில் இடம்பெறவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0772105375 மற்றும் 0766242311 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்த முடியும்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply