ஐ.எம்.எஃப்பின் இரண்டாம் கட்ட கடன் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கருத்து!

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான முதலாவது மீளாய்வு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அவர் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட இந்த கடன் திட்டத்திலிருந்து இடையில் விலகுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லை எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஆரம்பித்த மீளாய்வு கலந்துரையாடல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கல்துரையாடல் நிறைவடைந்ததன் பின்னர் ஐ.எம்.எப் இன் இரண்டாம் கட்ட கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு மற்றும் வெளிநாட்டு நிதி சந்தையில் பிரவேசிப்பதற்கான சக்தியை தான் சர்வதேச நாணய நிதியம் இதனூடாக தமக்குப் பெற்றுத் தருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில் தாங்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சில விடயங்களில் நீதிமன்ற செயற்பாடுகள் இடம்பெற்றமையால் சில சட்டமூலங்களை நிறைவேற்ற சிறிது தாமதம் ஏற்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாம் கட்ட கடன் உதவியை பெற்றுக்கொள்ளவும் அதனூடாக முன்னோக்கி செல்லவும் தமக்கு எந்த பிரச்சினைகளும் ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட இந்த கடன் திட்டத்திலிருந்து இடையில் விலகுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை எனவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் இருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply