யாழ்.பல்கலையில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற தியாக தீபம் நினைவேந்தல்!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாகத்தில்  மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தலில், கலைப்பீட நான்காம் வருட மாணவன் தீபன் நினைவுதின உரையினை முன்வைத்திருந்ததோடு, மலரஞ்சலி மற்றும் ஈகைச் சுடர் ஏற்றி மாணவர்களால்   நினைவேந்தல்கள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இதன் போது மரக்கன்றுகள் நினைவேந்தலில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் யோ.நெவில்குமார் மற்றும் விஞ்ஞானபீட மாணவர்  ஒன்றிய  தலைவர் ச.அபிறஷன் உள்ளிட்டவர்களின் பங்குபற்றலுடன் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply