ஒரு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது !

தெஹிவளை பன்னலோக மாவத்தையில் வைத்து 1 கிலோ 10 கிராம் ஐஸ்  போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரூபா 150,000க்கும் அதிகமான பணமும் சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த  பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply