அதிகரிக்கப்படுமா பேருந்துக் கட்டணம்?

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பேருந்து கட்டணத்தை குறைந்தது 5 வீதம் அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஓட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 62 ரூபாவாலும் உயர்த்த சிபெட்கோ மற்றும் லங்கா IOC நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையிலேயே தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் மேற்குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply