நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி – திருமலையில் போராட்டம்!

முல்லைதீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று காலை திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தின் போது, சட்ட ஆட்சியை நிலை நிறுத்து, நீதித்துறையில் தலையிடாதே, நீதித் துறையை சுயமாக இயங்கவிடு, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சட்டத்தரணிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply