நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி – உடனடி விசாரணையில் இரு குழுக்கள்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில், முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்றைய தினம் விடுத்த பணிப்புரைக்கு அமைய, குறித்த விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் குறித்த குழுக்கள் முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply