நீதிகோரி வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்!

முல்லத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி பி.பிறோமநாத் பணிப்புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை 10 மணிக்கு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது,  நீதிதுறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம், சட்டத்தின் முன் யாவரும் சமம், நீதிதுறையை அச்சுறுத்தாதே, பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், சுதந்திரத்தில் தலையிடாதே போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு பேரணியாக நீதிமன்ற வீதி சுற்றுவட்டத்திற்கு சென்று மீண்டும் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் சென்றடைந்து நீதி கோரி சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்காரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply