போதைப்பொருள் கடத்திய இளம்பெண் கைது!

பிரபல குற்றவியல் பிரமுகரான கணேமுல்ல சஞ்சீவவின் கூட்டாளியான கலன என்பவரின் போதைப்பொருள் கும்பலை நடத்தியதாக கூறப்படும் இளம் பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று  இரவு ராகம குருகுலாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இமா என்ற மாற்றுப்பெயரில் செயற்பட்ட  குறித்த சந்தேகநபர்  இவ்வாறு   கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் 5 கிராம் மற்றும் 490 மில்லி கிராம்  ஐஸ் போதைப்பொருள் இருந்ததையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் வத்தளை எண்டரமுல்ல பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், ஜூலை 14 மற்றும் ஆகஸ்ட் 12ஆம் திகதிகளில் முறையே துனுமலை மற்றும் நீர்கொழும்பில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply