இலங்கை வரும் 5 நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு!

5 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து விசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த அடிப்படையில், சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வீசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply