ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் பலி!

திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இளைஞரொருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அபயரத்னகே தரிந்து அசங்க எனும்  இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
போதைப்பொருள் பாவனையின் காரணமாக ஏற்பட்ட  மன உளைச்சல்  காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதுடன் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply