மொட்டுக் கட்சி இல்லை என்றால் ரணில் கவிழ்ந்தே தீருவார் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேசாமல் அமைச்சரவையை மாற்றுவதற்கு ஜனாதிபதிக்குத் துணிவு வந்துவிட்டதா என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் சுயநலம் கருதி தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி திரும்பப் பெற்றால் அவர் கவிழ்ந்தே தீருவார் என்றும் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply