அமெரிக்காவில் மர்ம நபரின் தாக்குதலால் பதற்றம்!

அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply