கைது செய்யப்பட்ட மில்கோ ஊழியர்களுக்கு பிணை வழங்கப்பட்டது!

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேராவை பிணைக் கைதியாக வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட மில்கோ தனியார் நிறுவனத்தின் 13 ஊழியர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 10 இலட்சம் ரூபா பிணையில் குறித்த குழுவினர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

ஊழியர் நலன்கள் தொடர்பான பிரச்சினையில் நிறுவனத்தின் தலைவரை பிணைக் கைதியாக வைத்திருந்த 13 மில்கோ ஊழியர்கள் நேற்றிரவு கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பொலிஸாரின் தலையீட்டைத் தொடர்ந்து பெரேரா பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply