பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது!

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து நேற்றிரவு காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை மாவட்டத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் காரைதீவு பிரதான வீதியில் வைத்து சந்தேக நபர் 500 போதை குளிசைகளுடன் கைது செய்யப்பட்டார்.

அம்பாறை திசாபுர பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடமிருந்து 500 போதை குளிசைகள் உட்பட அவர் பாவித்த கைத்தொலைபேசியும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட, அவரிடம் இருந்து கைப்பற்றபட்ட சான்று பொருட்களும் காரைதீவு பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply