வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ள மணல் முழு நீளத் திரைப்படம்!

ஈழத்தில் தயாரிக்கப்பட்ட மணல் திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது.

திரையரங்குகளில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே திரையிடப்படவுள்ளது.

விசாகேச சந்திரசேகரம் இயக்கத்தில் உருவாகும் குறித்த முழு நீளத் திரைப்படம், ஈழத்தமிழரின் இறுதிப் போர்க்கால சூழலையும் அதனையடுத்து புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் வாழ்விற்கான போராட்டத்தையும் தத்ரூபமாக எடுத்துக்காட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திரைப்படம், 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழாக்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, 4 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

அதுமட்டுமன்றி, இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி மற்றும் மின் வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய நெருக்கடி நிலையிலும் விடமுயற்சியின் காரணமாக இலங்கையில் இருந்து வெளிவந்த ஒரேஒரு இலங்கைத் திரைப்படம் மணல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply