முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகள்!

முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட புதுமாத்தளன் கடற்கரையில் இன்று காலை 6.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து அப் பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் கஞ்சா பொதிகளை கண்டுபிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் 11 கஞ்சா பொதிகளில் சுமார் 22 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் வேறு ஏதேனும் கஞ்சா பொதிகள் ஒதுங்கியுள்ளனவா என கடற்கரை முழுவதும் சோதனை செய்யப்பட்டதுடன் கடற்தொழிலாளர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் கஞ்சா பொதிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்த காவல் துறையினர் காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply