இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிதி செலவீட்டை தெளிவுபடுத்திய ரொஷான் ரணசிங்க!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் இருந்து விளையாட்டு அமைச்சுக்கு கிடைத்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான எழுத்து மூல ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ரணசிங்க, இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நிதியில் கணிசமான தொகை காலணிகள் மற்றும் ஏனைய விளையாட்டு உபகரணங்களின்றிய சிறுவர்களுக்காக செலவிடப்பட்டதாக வலியுறுத்தினார்.

மேலும், இந்தத் தொகையின் ஒரு பகுதி, போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற வீரர்களுக்காக பல சந்தர்ப்பங்களில் செலவிடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

கிரிக்கெட் வீரர்களின் அர்ப்பணிப்பால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பணம் தேவையில்லாமல் செலவிடப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply