தெஹிவளையில் கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு!

தெஹிவளையில் உள்ள பதினொரு மாடி கட்டிடத்தில் இன்று காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில், கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தெஹிவளை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டு மீட்கப்பட்டது.

இதேவேளை, இலக்கம் 124 அனகாரிக தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் கைவிடப்பட்ட நிர்மாணத் தளமாகவே உள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply