அங்கொடையில் 1 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

1 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் வைத்திருந்த பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், குடு தானு என்று பிரபலமாக அறியப்பட்டவர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் வியாபாரி மற்றும் கிரிமினல் பிரமுகரான மாத்தரா கல்பா என்பவரின் போதைப்பொருள் விநியோகத்தை நடத்தி வந்துள்ளார்.

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொட பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, 1 கிலோ 50 கிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளை , போதைப்பொருள் விநியோகம் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 12,000 ரூபாவும் , தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply