2024 முதல் வடக்கில் அமுலுக்கு வரும் புதிய திட்டம்!

வடக்கு மாகாணத்தில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில்  அச்சிட்டு விநியோகிக்கப்படும் மின் பட்டியல் நிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும் குறிப்பிடுகையில், குறித்த நாளிலிருந்து இலத்திரனியல் மின்பட்டியல் அனுப்பிவைக்கப்படும் என்றும், இலத்திரனியல் மின்பட்டியலை  குறுந்தகவல் மூலமாகவோ, அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதற்காக EBILL  கணக்கு இலக்கம் உங்களுடைய மின்னஞ்சல் என தட்டச்சு செய்து 1987 என்ற இயக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்பி பதிவு செய்யல்லாம்.

மேலும், EBILL.ceb.lk என்ற இணையப் பக்கத்தின் ஊடாகவும் பதிவு செய்யலாம் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply