தேர்தல்கள் தொடர்பாக ரணிலின் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் அதனை தொடர்ந்து நாடாளுமன்ற, மாகாணசபை தேர்தல்களும் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் பூகோள திராவிட அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

மேலும், தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஒவ்வொரு நபரும் சம உரிமையுடனும், பெருமையுடனும், நம்பிக்கையுடனும், அமைதியுடனும், அச்சமின்றி, சந்தேகமின்றி வாழக்கூடிய இலங்கை என்ற பட்டத்துடன் “இமயமலை அறிக்கை” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply