குறைவான கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை!

இலங்கை மக்கள் அபுதாபி செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச் சேவையை எயார் அரேபியா விமான நிறுவனம்  ஆரம்பித்துள்ளது.

இதன் முதலாவது விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. 158 பயணிகள் மற்றும் 8 விமான நிலைய ஊழியர்களுடன் குறித்த எயார் அரேபியா 3L-197  விமானம் தரையிறங்கியது.

இவ் விமானசேவை வாரத்தின் ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு இலங்கை வந்தடையும் எனவும் அதே விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு அபுதாபிக்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply