கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 100 மில்லியன் பெறுமதியான குஷ் கஞ்சா கண்டுபிடிப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் சுமார் 100 மில்லியன்ரூபா பெறுமதியான குஷ் கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளனர்.

விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பொதியிலேயே கடத்தல் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேல்மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பயணப் பொதிக்குள் மொத்தம் 19 கிலோ 588 கிராம் குஷ் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply