இலங்கையில் தாக்கப்பட்ட பங்களாதேஷ் பெண் வைத்தியர் ! கிருலப்பனையில் சம்பவம் !

பங்களாதேஷை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர், கொள்ளைக் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

கிருலப்பனை பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் வைத்து குறித்த பெண் தாக்கப்பட்டு , அவரது நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தினால் அச்சமடைந்த அந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதுடன், மின்னஞ்சல் மூலம் செய்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply